search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில் கிளிண்டன்"

    • பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இதற்கிடையே வாடகை விமானம் மூலம் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் லாகூரில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன், ஆனால் உங்களுடனான எனது அன்பு உறவும் அதேதான். இந்த உறவில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க விரும்பியபோது, வெளிநாட்டு அரசாங்கங்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்தன.

    அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருப்பதற்காக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நமக்கு 5 பில்லியன் டாலர் தருவதாக கூறினார்.

    ஆனால் அவற்றையும் மீறி 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என தெரிவித்தார்.

    • பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.

    வாஷிங்டன் :

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அவர் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. மொத்தத்தில் நான் நன்றாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு கிளிண்டன், சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்பட்டு, அது ரத்தத்தில் கலந்து விட்டதால் அவதிப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்னர் குணம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

    ×